
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 3 வாரங்கள் அளிக்கப்பட்ட லாக்டவுனில் இந்தியாவில் ஆபாச வலைதளங்களை பார்ப்போர் எண்ணிக்கை 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் கிடைத்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்கள் இந்த நிலை தொடரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் வீட்டில் இருந்து ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆபாச படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆபாச வலைதள ரிப்போர்ட் கூறியுள்ளது.
இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் விட இந்தியாவில் பன்மடங்கு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனைக்கும், இந்தியாவில் பல ஆபாச தளங்கள் ப்ளாக் செய்யப்பட்டுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.



