
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று (ஏப்ரல் 21) முதல் வரும் 23ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
தேர்தல் நேரத்தில் சட்ட ஒழுங்கை பேணவும், வாக்குப்பதிவு சீராக நடைபெறவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில் மதுபான விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும் என்றும், விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்க சூழல் ஏற்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Facebook Comments





