Spotlightசினிமாதமிழ்நாடு

தீ ’விபத்தால்’ உயிரிழந்த ஜெயஸ்ரீ… அதிமுக-வின் திடீர் அறிக்கையால் பரபரப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ இரு தினங்களுக்கு முன் இரு கயவர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இருவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயஸ்ரீ’யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக அரசின் சார்பில் 5 லட்சம் நிவாரணமும் வழங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அதற்கான காசோலை ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘தீ விபத்தினால் உயிரிழந்த ஜெயஸ்ரீ’ என குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

எரித்து கொலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீ’யை விபத்து என திசை திருப்புவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button