Spotlightசினிமா

ஒரே ஷாட், ஒரே ஆள், மூன்று கதாபாத்திரங்கள்… அதிரடி காட்டும் ஆதேஷ் பாலா!

20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருப்பவர் நடிகர் ஆதேஷ் பாலா. பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வைத்திருப்பவர்.

அவ்வப்போது குறும்படங்களையும் இயக்கி தன்னுள் இருக்கும் இயக்குனரையும் வெளிக்கொண்டு வருகிறார் ஆதேஷ் பாலா.

இவர் தற்போது இயக்கியிருக்கும் ”அந்த இரவில்” குறும்படம் பெரிதளவில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. காரணம் என்னவென்றால், இந்த குறும்படத்தில் ஆதேஷ் பாலா நடித்திருக்கிறார். பத்து நிமிடங்கள் ஒரே ஷாட் காட்சிப்படுத்தப்பட்டு, மூன்று கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் ஆதேஷ் பாலா.

இவரின் இந்த அசாத்திய முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இக்குறும்படத்தின் முதல் பார்வையை திரையுலகைச் சேர்ந்த சுமார் 50 பேர் வெளியிட இருப்பது கூடுதல் மகிழ்ச்சியான தகவலாகவும் இருக்கிறது.

இக்குறும்படத்திற்கு ரமேஷ் விநாயகம் இசையமைத்திருக்கிறார்.

நடிகர் ஆதேஷ் பாலா, விரைவில் வெள்ளித்திரையில் பெரிய நடிகராக வலம் வர தமிழ் வீதி சார்பாக வாழ்த்துகள் கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

 

Facebook Comments

Related Articles

Back to top button