
‘
மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்ரா மாவட்டத்திற்கு அருகில் உள்ள அம்ரூட் என்ற பகுதியை சேர்ந்தவர் ப்ரவீன் புர்வியா. இவருக்கு வயது 30. சில மாதங்களுக்கு முன் சந்தோஷி (25) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ப்ரவீனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று, இரவு வேளையில் அதிகமாக குடித்திருந்த ப்ரவீன், மீண்டும் சரக்கு அடிப்பதற்காக தனது மனைவியை சரக்கு வாங்கி வர கடைக்கு அனுப்பியிருக்கிறார்.
அவர், வர தாமதமானதால், வீட்டிற்கு வந்த மனைவியை மரக்கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதனால், பலத்த காயம் அடைந்த சந்தோஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Facebook Comments





