Spotlightசினிமா

‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளது


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் பான் இந்திய ரசிகர்களுக்கு பிரம்மாண்ட மற்றும் புதிய சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. பல்வேறு கதைக்களங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பொழுதுபோக்கு என இந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடைந்துள்ளது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களின் அறிவிப்பு மற்றும் வெற்றிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘டியூட்’ போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகிறது.

தற்போது அப்பா,மகள் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான ‘இருமுடி கட்டு’ படத்தைத் தயாரித்துள்ளது. பான் இந்திய நட்சத்திரமாக உருவெடுத்ததற்கு முன்னரே அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்பட்ட ரவி தேஜா, இந்தப் படத்தில் தனது வழக்கமான மாஸ் அவதாரத்தை விட்டு விலகி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான விஷுவல் கிளிம்ப்ஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

மகளை உயிராக நேசிக்கும் அன்பான அப்பா, கோபம் நிறைந்த மனிதர், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க மது பழக்கத்தை கைவிட்டு பகவான் ஐயப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக மனிதர் என மூன்று விதமான ரவி தேஜாவை இந்த க்ளிப்ம்ஸில் காண முடிகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பைலிங்குவல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ரவி தேஜாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பகவான் ஐயப்பனின் ஆன்மிகப் பின்னணியில் உருவாகும் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் உறவுகள், தனிமனித மாற்றங்கள் மற்றும் மனித வாழ்க்கையின் உணர்ச்சிமிக்க பரிமாணங்களை மையமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. மிகைப்படுத்தப்பட்ட கதை சொல்லலைத் தவிர்த்து, உண்மைத்தன்மை மிக்க கதாபாத்திரங்கள், மனதைத் தொடும் தருணங்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை என இந்தப் படம் உருவாகியுள்ளது. உணர்வுகளே இதன் மையமாக இருப்பதால், ‘இருமுடி கட்டு’ ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதன் கலாச்சார வேர்களும் ஆன்மிக அம்சங்களும் இந்த திரைப்படப் பயணத்திற்கு தனித்துவமான அழகை சேர்க்கின்றன.

விஷுவல் கிளிம்ப்ஸ் மற்றும் ‘இருமுடி கட்டு’ என்ற தலைப்பும் படத்தின் மையக்கருவை தெளிவாக பிரதிபலிக்கிறது. ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் தலைப்பிலிருந்தே தொடங்குகிறது என்பார்கள். அந்த வகையில், இந்தத் தலைப்பு பகவான் ஐயப்பனுடன் தொடர்புடைய பக்தி மற்றும் ஆன்மிக உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது.

இது வெறும் பக்தியின் அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு மனிதனின் உணர்வு மற்றும் ஆன்மிக மாற்றப் பயணத்தையும் குறிக்கிறது. இது ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு உறுதியளித்துள்ளது.

*நடிகர்கள்:* ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசாலா லக்ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, ரமணா பார்கவ், கிஷோர் காஞ்சரபாளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,
வழங்குபவர்கள்: டி- சீரிஸ் குல்ஷன் குமார், பூஷன் குமார்,
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம்: சிவா நிர்வாணா,
இசை: ஜிவி பிரகாஷ்குமார்,
ஒளிப்பதிவு: விஷ்ணு ஷர்மா,
தலைமை நிர்வாக அதிகாரி: செர்ரி,
தலைமை நிர்வாக தயாரிப்பாளர்: தினேஷ் நரசிம்மன்,
தயாரிப்பு வடிவமைப்பு: சாஹி சுரேஷ்,
படத்தொகுப்பு: பிரவீன் புடி,
கூடுதல் திரைக்கதை: நரேஷ் பாபு பி,
இணை இயக்குநர்: சுரேஷ்,
ஒப்பனை: ஸ்ரீனிவாஸ் ராஜூ,
ஆடை வடிவமைப்பு: ராஜேஷ்,
போஸ்டர் வடிவமைப்பு: யெல்லோ டூத்ஸ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

‘இருமுடி கட்டு’ திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button