Spotlightசினிமா

சுஷாந்த் சிங் பிரேத பரிசோதனை முடிந்தது; போலீஸார் வெளியிட்ட முக்கிய தகவல்!

பாலிவுட்டின் முன்னனி நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங். ஆரம்பத்தில் இவர் சீரியல்களில் தான் நடித்து வந்தார், முதல் படமே நல்ல ஹிட், அதனால் பெரிய வாய்ப்புக்கள் தேடி வந்தது.

இவர் நடித்த எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் மெகா ஹிட் அடித்து, மிகவும் பிரபலமான நடிகராக மாறினார்.

இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவரின் உடல் பரிசோதனை செய்து, சுஷாந்த் தற்கொலை தான் செய்துக்கொண்டார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் தற்கொலை செய்த போது வீட்டில் சமையல் வேலை செய்பவர்கள் மற்றும் நண்பர் ஒருவர் இருந்ததாக கூறியுள்ளனர். குடும்பத்தினரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவம்.

Facebook Comments

Related Articles

Back to top button