10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை வரும் 15 ஆம் தேதி நடத்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குழந்தைகளின் நலன் கருதி பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்பொது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசிடம் கேள்வி கணைகளை தொடுத்தது…
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டுவது ஏன்..?
ஜூன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா?
9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம்
9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா
10 நிமிடத்தில் முடிவெடுக்காவிட்டால் தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும்
என்று கேள்வி எழுப்பியுள்ளது. இன்று மதியம் 2.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.