
நடிகர் விஜய் அவர்கள் வரும் 22 ஆம் தேதி தனது பிறந்த்நாளை கொண்டாடுகிறார். இதற்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வந்தனர்.
இந்நிலையில், கொரோனா தாக்கம் அதிகமாகி வருவதால் தனது பிறந்தநாளை முன்னிட்டு எந்த ஒரு கொண்டாட்டங்களும் வேண்டாம் என்றும் பாதுகாப்பாக சமூக விலகலை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக்கொள்ளும்படி விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்திருக்கிறார்.
தளபதி விஜய்யின் வேண்டுகோளை ரசிகர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments





