கொரோனா பாதிப்பில் உலகம் முழுவதும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர் மக்கள். நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், பல ஜாம்பவான்கள் தங்களால் இயன்ற நிவாரண நிதியை மக்களுக்காக அளித்து வருகின்றனர்.
இந்தியாவிலும் பிரதமர் நிவாரண நிதிக்காகவும் தமிழகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்காகவும் பலரும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் அஜித்குமார் சற்று நேரத்திற்கு முன்பு 1.25 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
பலரும் நிதியுதவி அளித்துள்ள நிலையில், விஜய் இன்னமும் ஏன் நிதியுதவி அளிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விரைவில், நிதியுதவி அளிப்பார் என்று அவரது ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Facebook Comments