தமிழகத்தில் தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், தமிழகத்தில் சென்னையை தவிர பிற இடங்களில் 11ஆம் தேதி முதல் டீ கடைகள் திறக்கலாம்
டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்; நின்றோ, அமர்ந்தோ உட்கொள்ள அனுமதி கிடையாது
அதுமட்டுமல்லாமல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டீ கடைகளை திறக்க அனுமதி கிடையாது
மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
Facebook Comments