சினிமாவின் உயிர் துடிப்பு என்று கூறினால் அது தயாரிப்பாளர்கள் தான். இவர்கள் இன்றி சினிமாவில் ஒரு அணுவும் அசையாது என்றே கூறலாம்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் பிரம்மா என்று அழைக்கப்படுபவர் ஒருவர் தான். கலைப்புலி எஸ் தாணு என்ற ஒருவரே.
படத்தின் குழு எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதில் ஆரம்பித்து அப்படத்தை திரைக்கு கொண்டு, ரசிகர்களின் கைதட்டல்களையும் விசில் சத்ததையும் பெறுவது வரையிலும், கலைப்புலியின் மெனக்கெடல்களை எளிதில் சொல்லிவிட முடியாது.
பல கலைஞர்களின் வீடுகளில், அவர்களின் வாழ்க்கை என்ற ஒளிதீபத்தை ஏற்றி வைத்தவர் இவரே என்று கூறலாம்.
தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற படங்களான கிழக்குச் சீமையிலே, காக்க காக்க, துப்பாக்கி, தெறி, கபாலி ஆகிய படங்களை தயாரித்ததும் இவரே…
படங்களை தயாரிப்பதோடு இருந்து விடாமல், அதை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் வரை ஓயாது ஓடிக் கொண்டே இருக்கும் தயாரிப்பாளரும் இவரே..
இன்னும் பல தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு தரவிருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களுக்கு 61 வது அகவை தின வாழ்த்துகள்….