
எப்போதும் சமூக வலைதளத்தில் ரொம்ப ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை கஸ்தூரி.
அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக தான் இருந்து வருகிறது.
அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை ஆபாசமாக பேசுவதும், அதற்கு கஸ்தூரி ஆவேசமாக பதில் அளிப்பதும் நடந்து கொண்டு தான் வருகிறது.
இந்நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் மிகவும் ஆபாசமாக கஸ்தூரிக்கு ட்விட் செய்ய, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இன்னும் எத்தனை
அஜித் சார் இன்னும் எத்தனை நாள் தான் சும்மா இருக்க போறீங்க…??? உங்க ரசிகர்கள் இப்படி கேவலமா ஆபாசமா பேசுவதை கண்டிக்க மாட்டீங்களா? என பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடமும் இதனை தடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளுக்கு நாள் மூளும் இந்த ட்விட்டர் சண்டைகள் என்று தான் முடிவுக்கு வருமோ..??
@SureshChandraa , see what your blind silence is leading to. அவளால என்ன பண்ண முடியும் , கதறுவதை தவிர என்ற திமிர் எங்கேயிருந்து வந்தது? உங்கள் மௌனத்தில் இருந்து வந்தது. @TNPOLICE_HQ , Please consider this my complaint against the users whose screenshot is attached here. pic.twitter.com/9kv8aUmq9Z
— Kasturi Shankar (@KasthuriShankar) March 10, 2020





