டிசம்பர் மாதம் என்றாலே தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலான மாதங்களாக மாறி வருகிறது சில வருடங்களாக.
அந்த வகையில், இந்த வருடமும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கும் முன்னரே நிவர் புயல் தமிழகத்தை ஆட்டி படைத்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது புரெவி புயல் தமிழகத்தை மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலாய் தீபகற்பம் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.
தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும்இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக மக்களே எதற்கும் தயாராக இருந்து கொள்ளுங்கள்..
Facebook Comments