Spotlightசினிமா

விஜயகாந்த் அவர்களின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கும் ஆரி!

புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரை உலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் அ.செ. இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் ராவுத்தர் பிலிம்ஸ்.

இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நெடுஞ்சாலை புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் ” எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ்.U இயக்குகிறார்.இப்படத்தின் கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் பகவதி பெருமாள் மற்றும் நாகேஷ் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சர்யா இசையமைக்க லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இதன் முதல் பார்வை (FirstLook)போஸ்டர்-ஐ நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை அ.செ. இப்ராஹிம் ராவுத்தரின் மகனான அ. முஹம்மது அபுபக்கர் தயாரித்து வருகிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button