Spotlightஇந்தியாதமிழ்நாடு

பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்துள்ளார்.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற காம்பீர் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். கவுதம் காம்பீருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்த நிலையில் கவுதம் காம்பீர் பாஜகவில் இன்று இணைந்துள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகவும், பாஜகவில் இணைந்து பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுவதாக காம்பீர் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையும் காம்பீர் சந்தித்தார். டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிட கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button