ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள திரைப்படம் ’கொரில்லா’. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் ராதாரவி,
“என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்பாளரைப் பாராட்டுகிறேன். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன்.
மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன் யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகன். இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்.தமிழகத்தில் மக்களவை தேர்தம் முடிந்ததும் எல்லோரும் ஜாலியா இருக்காங்க.. ஏன்னு கேட்டா.. எங்க ஆட்சி மத்தியில பெரும்பான்மை வாங்கிடுச்சுன்னு ஒரு கட்சிக்காரன் சொல்ட்றான்.. இன்னொரு கட்சிக்காரன் எங்க கட்சி ஆட்சி நிலைச்சிடுச்சின்னு சொல்ட்றான்… தோக்குறவனுக்கு ஜே போட்றீங்க.. ஜெயிக்கிறவனுக்கும் ஜே போட்றீங்க .. யார்ரா நீங்க” என்று தற்போதைய அரசியலை கலாய்த்தார்.