தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆறு மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழை வரைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருச்சி, பெரம்பலூர், கடலூர், மதுரை, சேலம், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Facebook Comments