ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் படத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்த படமான அகிலன் படத்தில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி.
அகிலன் படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். சாம் சி எஸ் இசையமைத்து வருகிறார்.
”அகிலன்” படப்பிடிப்பும் ஏறக்குறைய முடிவடைந்துவிட்ட நிலையில், தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கியிருக்கிறார் ஜெயம் ரவி.
ஜெயம்ரவியின் 30வது படமாக வரும் இந்த படத்தை எம் ராஜேஷ் இயக்கவிருக்கிறாராம். நாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
ஜுன் மாதம் இதற்கான படப்பிடிப்பு துவங்கப்படவிருக்கும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments