![](https://tamilveedhi.com/wp-content/uploads/2018/05/Kathiri.jpg)
சென்னை: கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது. இதனால் இயல்பாக இருக்கும் வெயிலை விட அதிகமாக வெயில் காணப்படும்.
இதனால் மக்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சரும பிரச்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்றிலிருந்து மே 28 ஆம் தேதி வரை இந்த அக்னி வெயில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளியே செல்லும்போது மக்கள் குடை எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Facebook Comments