
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘கத்தி’. இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் கதை தன்னோடது என்று குறும்பட இயக்குனர் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கில், விஜய் , தயாரிப்பு நிறுவனம், இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேற்று வந்த போது ‘கத்தி’ திரைப்படம் தொடர்பான வழக்கில் இருந்து நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவிப்பதாக அறிவித்தது.
கத்தி திரைப்படத்தையும், தாகபூமி குறும்படத்தையும் தஞ்சாவூர் நீதிமன்ற நீதிபதி பார்க்க வேண்டும், படத்தை பார்த்த பின் புகார்தாரர் கூறும் ஒற்றுமை இருந்தால் விசாரணை நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் இயக்குநர் முருகதாஸை மட்டுமே எதிர்மனுதாரராக சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.