இம்மாதம் 17-ஆம் தேதியோடு கொரோனா லாக்டவுன் நிறைவு பெறுகிறது. மூன்று கட்டமாக நடைபெற்ற இந்த லாக்-டவுன் முடிவுக்கு வருகிறது.
4வது கட்டமாக லாக்-டவுன் இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அதற்கான அறிவிப்பு திங்கட்கிழமைக்குள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
வந்த தகவலின் படி அடுத்த 2 வாரங்களுக்கும் லாக்-டவுன் நீடிக்கும் என தெரிகிறது. இதில், பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு கூடுதலான தளர்வுகள் இருக்கும் என தெரிகிறது. சிவப்பு மண்டலத்திற்கு இப்போது இருக்கும் தளர்வுகளை காட்டிலும் இன்னும் சற்று கூடுதலான தளர்வுகள் இருக்கும் என நம்பப்படுகிறது.
அதிலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்னும் கூடுதலாக கண்காணிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து சமூக இடைவெளியுடன் இயக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கப்படும் எனவும் தெரிகிறது.
இந்த மாத இறுதியுடன் ஒட்டுமொத்த லாக்0டவுனும் முடிவுக்கு வரக்கூடும் என தெரிகிறது.