
மத வழிபாட்டு தலங்களை திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், ஷாப்பிங் மால்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
வரும் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
மால்களில் உள்ள உணவகங்கள், ரெஸ்டாரண்டுகள் 50 சதவீத இருக்கையுடன் இயங்க வேண்டும்.
ஷாப்பிங் மால்களில உள்ள திரையங்குகள் செயல்பட அனுமதி இல்லை
65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும்
முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்
ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே மால்களில் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
Facebook Comments





