பாலியல் தொந்தரவுகள், பாலியல் கற்பழிப்புகள் என பெண்களுக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளுக்கும் எதிராக தொடர்ந்து பாலியல் வன்முறைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பாலியல் குற்றத்திற்கு எதிராக வழங்கப்படும் தண்டனைகள் மிகக் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் பல வருடங்களாக வெறும் வேண்டுகோளாகத் தான் இருந்து வருகிறது.
போராட்டங்கள், விழிப்புணர்வுகள் என அனைத்தும் இருந்தும் தொடர்ந்து இந்த குற்றங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.
நடிகர் கதிர் தயாரித்து, நடித்து இயக்கிய குறும்படம் தான் ‘கற்பழிப்பை கருவறுப்போம்’.
இளஞ்சிறார்களை பாலியல் கொடுமை செய்யும் கொடூரன்களுக்கு ஒரு வித்தியாசமான தண்டனையை இதில் கொடுத்திருக்கிறார்கள்.
வாழும் போதே அந்த கொடூரன் நரகத்தை அனுபவிக்கக் கூடிய தண்டனை அது.
படத்தில் நடித்த கதிர் மற்றும் மஹாலட்சுமி இருவருமே ஆகச் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.. மஹாலட்சுமி பேசும் வசனங்கள் கண்களில் ரணத்தை வரவழைத்துள்ளது.
பாலியல் வன் கொடுமைகள் செய்யும் செய்யத் துடிக்குன் அரக்கன்களுக்கான செருப்படி..
ஒன்றிணைவோம் .
கற்பழிப்பை கருவறுப்போம்..