Spotlightசினிமா

அடுத்தடுத்து அதிரடி காட்டும் ‘அட்டு’ பட நாயகன்!!

அட்டு படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் நாயகன் ‘ரிஷி ரித்விக்’. நாயகனாக களம் இறங்கிய ரிஷி, கதையின் முக்கியத்துவத்தை அறிந்து எழுமின் படத்தில் வில்லனாக களம் இறங்கினார். இப்படத்தில் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது ‘மரிஜுவானா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

Thired Eye Creations சார்பாக MD விஜய் தயாரிப்பில் MD ஆனந்த் இயக்கத்தில் ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக் மற்றும் ஆஷா பார்த்தலும் நடிப்பில் இப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படத்துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் PL தேனப்பன், சரவணன் இயக்குனர்கள் RV உதயகுமார் மற்றும் ராஜு முருகன் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். ஒளிப்பதிவாளர் செல்வா கில்டு தலைவர் ஜாக்குவார்தங்கம் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜய்முரளி ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இயக்குனர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி பதிவு செய்யப்பட்டது. படக்குழுவை நேரில் சந்தித்த யோகிபாபு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button