Spotlightசினிமாவிமர்சனங்கள்

மார்க் ஆண்டனி – விமர்சனம் 3/5

நடிகர்கள்: விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன்,

இயக்கம்: ஆதிக் ரவிச்சந்திரன்

இசை: ஜி வி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமானுஜம்

1975 காலகட்டத்தில் கதை நகர்கிறது. பிரபல ஆராய்ச்சியாளரான செல்வராகவன், டைம் ட்ராவலர் டெலிபோன் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அந்த டைம் ட்ராவலர் டெலிபோன் கண்டுபிடித்த கொஞ்ச நேரத்தில் கேங்க்ஸ்டர் மோதலில் இறந்துவிடுகிறார் செல்வராகவன்.

காலங்கள் உருண்டோட 1995 காலகட்டத்திற்கு கதை நகர்கிறது. மகன் விஷாலான மார்க், மெக்கானிக்காக வருகிறார். அதே ஏரியாவில் மிகப்பெரும் டானாக இருக்கிறார் அப்பா எஸ் ஜே சூர்யா(ஜாக்கி). இவருக்கு மகனாக எஸ் ஜே சூர்யா (மதன்) வருகிறார்.

20 வருடத்திற்கு முன்பு கேங்க்ஸ்டராக இருந்த அப்பா ஆண்டனி(அப்பா விஷால்) மாதிரி ஆகிவிடக் கூடாது என்று நினைக்கிறார் மார்க். ஆம், இரண்டு விஷால், இரண்டு எஸ் ஜே சூர்யா.

அப்பா மீது தப்பான அபிப்ராயம் வைத்திருக்கிறார் மகன் விஷாலான மார்க். இந்த நிலையில் தான் 20 வருடத்திற்கு முந்தைய டைம் ட்ராவ்லர் டெலிபோன் மார்க்கிடம் சிக்குகிறது.

அதை வைத்து தனது பாஸ்ட் காலத்தில் நடந்தவற்றை அறிந்து கொள்ள முற்படுகிறார். 1975ல் என்ன நடந்தது.? தனது தந்தையான ஆண்டனி என்ன செய்து கொண்டிருந்தார்.? என்ற கேள்விக்கெல்லாம் விடையைக் கண்டுபிடிக்கிறார் மார்க்.

6 அடி காத்தே என விஷாலின் பாடலை இப்படத்தில் விஷாலுக்கு பக்காவாக பொருத்தி பார்க்கலாம். நடிப்பு, ஆக்‌ஷன் என அனைத்து ஏரியாவிலும் அதகளமாய் அடித்து விளையாடியிருக்கிறார். ரசிகர்களுக்கு செமையான ட்ரீட் வைத்து அவர்களின் எனர்ஜிக்கு கூடுதலாக பூஸ்ட்டும் கொடுத்திருக்கிறார் இப்படத்தில்.

விஷால் இதற்கு முன் நடித்த படங்களை காட்டிலும், இப்படத்திற்காக சற்று அதிகமாகவே உழைத்திருப்பது கண்கூட தெரிகிறது. அப்பா மற்றும் மகன் என இரண்டு கேரக்டரையும் பக்காவாக செய்து முடித்திருக்கிறார். அப்பா விஷாலுக்கு மாஸ் ஓவராக வைத்து அதிரடி காட்டியிருக்கிறார்கள்.

எப்போதும் தனக்கென ஒரு தனிபாணியை வழக்கமாக கொடுத்து வரும் எஸ் ஜே சூர்யா, இப்படத்திலும் அதையே கொடுத்து அசத்தியிருக்கிறார். வாட் ஏ மேன் என்று சொல்லும் அளவிற்கு மாஸ் லெவலும் ஏற்றி ஏற்றி கொடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் அப்பா & மகன் எஸ் ஜே சூர்யாவிற்குள் நடக்கும் அதகள போட்டி திரையரங்கை அதிர வைத்திருக்கிறது.

புஷ்பா, ஜெயிலர், மாவீரன் என தொடர்ந்து தனது நடிப்பின் திறமையை கொடுத்து வரும் சுனில் இப்படத்திலும் வேற லெவலில் தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ஜி வி பிரகாஷின் இசை மாஸ் ஓவர் லோட்டடாக இருந்தது படத்திற்கு பெரும் பலம். அதிலும், அதிருதா பாடலும், பஞ்சு மிட்டாய் ரீமேக் பாடலும் ஆட்டம் போட வைத்திருக்கிறது.

முதல் பாதி நமக்கு தலைவலி கொடுத்தாலும், இரண்டாம் பாதி கொடுத்த தலைவலிக்கு மருந்து போட்டிருக்கிறது. திரைக்கதையில் சற்று அதிகமாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாம் ஆதிக் ரவிச்சந்திரன்.

மார்க் ஆண்டனி – அதிர வைக்கும்

Facebook Comments

Related Articles

Back to top button