Spotlightசினிமாவிமர்சனங்கள்

மெய்ப்பட செய் – விமர்சனம் 3/5

யக்குனர் வேலன் இயக்கத்தில் ஆதவ் பாலாஜி, மதுனிகா, பி ஆர் தமிழ் செல்வம், ஆடுகளம் ஜெயபால், ஓஏகே சுந்தர், சூப்பர்குட் சுப்ரமணி, ராஜ்கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மெய்ப்பட செய்”. பாலியல் குற்றங்கள் பற்றி பறைசாற்ற வந்திருக்கும் படமாக வெளிவந்திருக்கும் திரைப்படமாக வந்திருக்கிறது “மெய்ப்பட செய்”.

கதைப்படி,

நாயகன் ஆதவ் பாலாஜி மற்றும் நாயகி மதுனிகா இருவரும் காதலர்கள். நாயகியின் தாய்மாமனாக வரும் பி ஆர் தமிழ் செல்வம் காதலுக்கு வில்லனாக வருகிறார்.

அவரின் எதிர்ப்பை மீறி, ஊரை விட்டு ஓடிச் சென்று இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுடன் மூன்று நண்பர்களும் இருக்கின்றனர்.

இவர்கள் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார்கள். அங்கு இவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று வருகிறது. வரும் பிரச்சனையை இவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஆதவ் பாலாஜி, இதுதான் முதல் படம் என்பது போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த ஒரு நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். ஹீரோயிசம் இல்லாமல், கதைக்கு என்ன தேவையோ கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

நாயகி மதுனிகா, அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். யதார்த்த நடிப்பால் அந்த கேரக்டரை பூர்த்தி செய்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

தாய்மாமனாக வரும் பி ஆர் தமிழ் செல்வத்தின் கேரக்டர் இரண்டாம் பாதியில் ட்விஸ்ட் காட்சியாக, யாரும் எதிர்பார்க்காத ஒன்று. மிரட்டலான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

ஆடுகளம் ஜெயபால், ஓஏகே சுந்தர், சூப்பர்குட் சுப்ரமணி, ராஜ்கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்களின் அனுபவ நடிப்பைக் கொடுத்து தாங்கள் சீனியர்கள் என்பதை நிரூபித்து நிலைத்திருக்கிறார்கள்.

பரணியின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும், பின்னணி இசையில் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் ஆர் வேல் அவர்களின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகள் அசுர வேகத்தை கொடுத்திருக்கிறது. ரசிக்கவும் வைத்திருக்கிறது.

பாலியல் குற்றங்கள் பற்றியான படங்கள் பல வந்தாலும், அதிலிருந்து “மெய்ப்பட செய்” தனித்து நிற்பது கவனிக்க வைத்திருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கான தீர்வையும் கொடுத்து படத்தை நன்றாகவே கூர்மையாக்கி கொடுத்திருக்கிறார் வேலன்.

மெய்ப்பட செய் – திறம்பட செய்திருக்கிறார்கள்…

Facebook Comments

Related Articles

Back to top button