தனது ஜாதியை சொல்லி இழிவு படுத்திய பா ஜ க வினருக்கு பினராயி விஜயன் பதிலடி
நிருபர்:- உங்களை சாதியை சொல்லி இழிவுபடுத்துகிறார்களே ?
பினராயி விஜயன்:-
“இம்மாதிரியான தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. அப்படியே அவர்கள் சொல்லிக்கொள்ளட்டும்
இம்மாதிரியான சாதிய ரீதியான தாக்குதல்களை புதிய தந்திரமாக பயன்படுத்துகிறார்கள். நான் அந்த சாதியில் (தீயர்) பிறந்தேன் என நினைவுபடுத்துகிறார்கள். நான் என்றுமே அதை மறுத்ததில்லை.
என் தந்தை பனை ஏறி தான்,,கள் இறக்கும் தொழில்தான் செய்தார். எனது சகோதரர்கள் அதைத்தான் செய்தார்கள். முன்பு நான்கு விதமான வர்ண அமைப்பில் சாதி அமைக்கப்பட்டது.
அதன்படி, ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த நபர் அந்த குறிப்பிட்ட சாதியை சார்ந்த தொழிலைத்தான் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார்கள்.
அதை நம்பிக்கொண்டிருக்கும் அந்த நபர்கள், அவ்வாறு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். அவர்களிடம் நாம் என்ன சொல்வது?
அந்த காலங்கள் முடிந்துவிட்டது. இது நவீன காலம். இதை புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லது” என்றார்.