Spotlightசினிமா

விஷாலின் 32வதுபடம்; பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு!

ராணா புரொடக்‌ஷன்ஸ் நடிகர்கள்ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடத்தின் படபிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள்.

நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிறுவனம் தான் #விஷால்32 படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்” நிகழ்ச்சியை இந்த ராணா புரொடக்‌ஷன்ஸ் தான் தயாரித்தது. இந்த வெற்றியெய் தொடர்ந்து தனது நண்பர்கள் ரமணா, நந்தா தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கிறார் விஷால்.

இதன் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#சமர் படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த சுனைனா, முதன் முறையாக விஷாலுடன் தனி ஹீரோயினாக ஜோடி சேருகிறார்.சுனைனா படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்.

ஒரு ‘பொருள்’ – #விஷால்32 படத்தின் கதையையும் டைட்டிலையும் தீர்மானிக்கும். விரைவில் டைட்டில் வெளியாகும் போது அந்த ‘பொருள்’ என்னவென்று தெரிந்துவிடும்.
சமீபத்தில் வெளியான பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A. வினோத்குமர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார்.

வசனம்: A.வினோத்குமார்/பொன்பார்த்திபன்.
சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button