Spotlightசினிமா

இருட்டு அறையை விரட்டுங்கள்… தரமான சினிமாவை வாழ்த்துங்கள் – ஜே எஸ் கே!

 

தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. அந்த அச்சத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வெளி வரும் “அண்டாவ காணோம்” திரைப்படம் நீக்கும் என தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார்.

ஜே எஸ் பிலிம் கார்பொரேஷன் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வரும் ஜே எஸ் கே கூறூம்போது, ‘அண்டாவ காணோம் ,நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு , குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம். குழந்தைகள் விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை.

சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது. இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவதுதான்.அதன் படியே தான் பணியாற்றி வருகிறேன். என் தயாரிப்பில் , அடுத்த மாதம் 29 ஆம் தேதி வெளி வர இருக்கும் “அண்டாவ காணோம்” என் கூற்றை நிரூபிக்கும்.” என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button