சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கிறது “தலைவர் 169”. பீஸ்ட் படத்தின் தோல்வியால் படத்தின் கதையில் பல மாற்றங்களை செய்ய ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ரஜினிகாந்தின் கதையை தான் தற்போது டெவலப் செய்து வருகிறது படக்குழு. அதுமட்டுமல்லாமல், கே எஸ் ரவிக்குமார் தான் திரைக்கதையை எழுதுகிறாராம். இயக்கத்திற்கு மட்டுமே நெல்சன் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
இப்படத்தில், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணையவிருக்கிறார்களாம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
ஜுலை மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதெல்லாம் நடந்தா சூப்பரா இருக்குமே என ரசிகர்கள் தரப்பு தகவலை பரப்பிக் கொண்டு வருகிறது.