அருண்காந்த் தயாரித்து இயக்கி சாம்ஸ் நாயகனாகவும் சந்தானபாரதி வில்லனாகவும் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ரிவெட்”.
கதைப்படி,
தனது தந்தையை மிரட்டி நிலத்தை அபகரித்த எம் எல் ஏ சந்தான பாரதியை பழி வாங்குவதற்காக வெளிநாட்டில் இருந்து சென்னை வருகிறார் கதையின் நாயகன் சாம்ஸ்.
தந்தை செய்யும் குற்றச் செயல்களை எதுவும் பிடிக்காமல் வெறுப்பில் தனியாக இருக்கிறார் சந்தான பாரதியின் மகன்.
சந்தான பாரதியின் மகன் தனது தந்தையை திருத்த பார்க்கிறார்
நாயகன் சாம்ஸ் சந்தான பாரதியை பழி வாங்கத் துடிக்கிறார்… இருவரும் இணைந்து களத்தில் இறங்க இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
ஆரம்பத்தில் நான் தான் நாயகன் என்று களமிறங்கி காட்சிகளை ஆக்கிரமித்தாலும், காட்சிகள் நகர நகர நாயகன் சாம்ஸை ”எங்கப்பா இங்க இருந்த ஹீரோவ” என்று தேடும் நிலையில் தான் வந்து செல்கிறார் சாம்ஸ்.
இவர்தான் வில்லன் என்று பலமுறை சொன்னாலும், இறுதிவரை அவரை வில்லனாக ஏற்றுக்கொள்ளக் கூடிய காட்சிகள் அவ்வளவாக இல்லாமல் போனது சற்று ஏமாற்றமே.
படத்தில் நடித்த நடிகர்களை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் அருண் காந்த். அதில் அவரை வெகுவாகவே பாராட்டலாம்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரம்மாண்ட படத்தை உருவாகி பல கோடிகளை வீணடிக்கும் பலரின் மத்தியில், இந்த பட்ஜெட்டில் இந்த மாதிரி கூட படங்களை எடுக்கலாம் என்று தனது திறமையை நிரூபித்த இயக்குனருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.
இருந்தாலும், அனைவரும் வெகுவாக பாராட்ட வேண்டும் என்றால் இன்னும் அதற்கான முயற்சிகள் சற்று கூடுதலாக எடுத்து படியேறினால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்து நிற்பார் இயக்குனர் அருண்காந்த் என்று கூறிக் கொண்டு
ரிவெட் – ஓகே