Spotlightசினிமா

சரவணன் மீது பாய்ந்த சின்மயி!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த 23-ஆம் தேதி அன்று தொடங்கி, தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது…

ஒவ்வொரு வாரமும் புது புது பிரச்சனைகள், பிக்-பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்டு தான் வருகிறது.

இந்நிலையில் இந்த வாரத்தின் சனிக்கிழமை நிகழ்ச்சியின் போது, கல்லூரியில் படிக்கும் போது, நான் பஸ்ஸிஸ் பெண்களை உரசுவதற்காகவே சென்றிருக்கிறேன் என்று சரவணன் கூற, அங்கிருந்தவர்கள் அவரின் பேச்சுக்கு கைதட்டினர்.

இதுதொடர்பான வீடியோவை பார்த்த பாடகி சின்மயி, ஒரு தமிழ் சேனலில் ஒரு பெண்ணை இடிப்பதற்காக நான் பஸ்ஸில் ஏறியிருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மக்களும் இப்படி கைத்தட்டுகிறார்களே என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்களும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button