Spotlightவிளையாட்டு

”நீங்க இன்னும் வளரனும் தம்பி”… தல ’டோனி’யா இருந்தா இத செய்திருக்க மாட்டார்!

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே இன்று ஐபிஎல் ‘எலிமினேட்டர்’ சுற்றுப்போட்டி நடைபெற்றது.விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில்,டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணியில் 20வது ஓவரில் 5வது பந்து ஒயிடாக வீசப்பட்டது. அந்த பந்து கீப்பர் வசம் சென்றது. அதனையடுத்து, பந்தை எதிர் கொண்ட ஹூடா ரன் எடுக்க முயற்சித்தார்.உடனே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பந்தை ரன்னர் ஸ்டெம்பை நோக்கி வீசினார். அப்போது நடு கிரீஸில் நின்று கொண்டிருந்த பவுல் மீது,ஓடி வந்த ஹூடா மோதி கீழே விழுந்தார். ஆனால் ரிஷப் வீசிய பந்து ஸ்டெம்பில் பட்டதால் ஹூடா அவுட் ஆனார்.

இந்நிலையில் பவுல் தடுத்ததால் தான் ஹூடாரன் அவுட் ஆனார் எனவே விக்கெட் வேண்டாம் என ஸ்ரேயாஸ் ஐயர் நடுவரிடம் கூறிவிட்டு ஸ்ரேயாஸ் பீல்டிங் செய்ய திரும்பி விட்டார்.உடனே ஓடி வந்த ரிஷப் பண்ட் விக்கெட் வேண்டும் என முறையிட்டார்.அவரிடம் ஸ்ரேயாஸ் பேசி பார்த்தும் விக்கெட் வேண்டுமென்பதில் ரிஷப் உறுதியாக இருந்தார்.

இந்த சம்பவம் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த முடிவிற்காக அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.மேலும் ரிஷப் பண்ட் இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், சென்னை அணியின் கூல் கேப்டன் டோனி இருந்தால், வீரரை பேட்டிங் செய்ய அனுமதித்திருப்பார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 

வீடியோ கீழே

https://www.iplt20.com/video/189283/the-hooda-tumble-trip-run-out

Facebook Comments

Related Articles

Back to top button