தமிழகத்தில் ஜூலை 31 நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும் என குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் எதுவுமின்றி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு தொடரும்.
மதுரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம்.
மற்ற விவரங்கள் இதோ…
பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை நீட்டிப்பு- ஆன்லைன் வழிக்கல்விக்கு தடையில்லை .
மாவட்டங்களுக்குள் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 15 வரை தடை
மதம் சார்ந்த கூட்டங்கள், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீடிப்பு
சுற்றுலாத் தலங்களுக்கும் தடை நீட்டிப்பு
சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதி பெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்