தமிழ்நாடு

தென் மாவட்டத்தில் வெயில் சென்று மழை வருகிறது …. நாளை முதல்!

தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்து வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கத்தை விட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘நாளை முதல் மூன்று நாட்களுக்கு, தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில், லேசான மழை பெய்யலாம். ‘வங்க கடலில், தமிழகத்தில் இருந்து, தென் கிழக்கு பகுதியில், லேசான மேலடுக்கு சுழற்சி உள்ளதால், இந்த மழைக்கு வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நிலவரப்படி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Facebook Comments

Related Articles

Back to top button