Spotlightதமிழ்நாடு

கொடியேற்றத்துடன் துவங்கிய வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா..!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. உலகப் பிரசித்திபெற்ற இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியேற்றி வைத்தார்.

விழாவையொட்டி, வேளாங்கண்ணியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த விழா செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த திருவிழாவை ஒட்டி தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இதேபோல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

Facebook Comments

Related Articles

Back to top button