Spotlightதமிழ்நாடு

சென்னையில் இளம் எழுத்தாளர்கள்.. ஒரே மேடையில் 15 புத்தகங்கள் வெளியீடு!

சென்னையில் இளம் எழுத்தாளர்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கு லேர்னர் சர்க்கிள் ஏற்பாடு செய்திருந்தது. புத்தக வெளியீட்டு விழா கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த விழா 10 ஆயிரம் எழுத்தாளர்களை உருவாக்கும் மாபெரும் திட்டத்தின் ஒருபகுதியாக நடத்தப்பட்டது. இந்த விழா இளம் எழுத்தாளர்கள் தங்களது படைப்பாற்றல், கற்பனை வளம் மற்றும் கதை சொல்லும் திறனை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நிக்வாக அமைந்தது.

லேர்னர் சர்க்கிள் இதுவரை 125க்கும் மேற்பட்ட இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் புத்தக வெளியீட்டு விழா கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துபாயில் நடைபெற்றது. அங்கு 42 இளம் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிட்டனர். குழந்தைகளின் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் விதமாக “சென்னை உத்சவ் 2025” என்ற பெயரில் இந்தத் திட்டம் தொடர்கிறது.

இந்த விழாவில் கல்வி மற்றும் இலக்கியத் துறையில் இருந்து பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அதன்படி, நிலா காமிக்ஸ் நிறுவனர், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை காமிக்ஸ் வடிவில் மாற்றியமைத்ததிற்காக பிரபலமான பி. சரவணராஜா, ஒருங்கிணைந்த கற்றல் அணுகுமுறை ஆதரவாளர் ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணா ரெட்டி ஜெ.எஸ். குளோபல் பள்ளி (JS Global School) முதல்வர், கல்வியாளர் ரெவ் சிஸ்டர் (Rev Sister) லிட்வின் மேரி ஃபாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர், ஆகியோர் கலந்து கொண்டு இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரை வழங்கினார்கள்.

புத்தக வெளியீட்டு விழாவில் விழாவில் 15 இளம் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெவ்வேறு இலக்கியம் மற்றும் கற்பனை வளத்துடன் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அவற்றில் முக்கியமான புத்தகங்கள் சில..

அத்வைதா டி.-Journey of Being Small (படப்புத்தகம்)
அம்ருதா ஜி.- Empty Pages (வளர்பிறை கதைகள்)
அக்ஷரா ஆர்.- Twisted Destinies and Dreaded Prophecies (கற்பனை)
ஆத்யா சூரியநாராயணன் – Mystics (கற்பனை)
முகிலன் பாலசுந்தரம் Code Cholera (சயின்ஸ் திரில்லர்)
– Sparks, Spice, and a Touch of Ice (F)
வைஷ்ணவி சதீஷ் குமார் – A War to Win (வரலாற்று புதினம்)
– A Boy’s Quest for the Magical Remedy (புராணம்)

இந்த இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து பயணத்தையும், அவர்களுக்கு கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

Eyes of Wonder: கூட்டு சாதனை

Learner Circle ஆனது “Eyes of Wonder” என்ற தொகுப்பு புத்தகத்தையும் வெளியிட்டது. இதில் எட்டு இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பு, இளம் எழுத்தாளர்களின் பல்துறை திறமையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சி ஆகும்.

லேர்னர் சர்க்கிளின் குறிக்கோள்: இளம் மனங்களை ஊக்குவித்தல்

10 ஆயிரம் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் திட்டம், குழந்தைகளின் படைப்பாற்றலை சிறப்பாக வளர்க்க உதவுகிறது. எழுத்து முதல் தொகுப்பு, பிரிண்டிங், வெளியீடு மற்றும் ஆன்லைனில் அமேசான் போன்ற தளங்களில் பட்டியலிடுதல் ஆகிய அனைத்தும் இந்த திட்டத்தின் மூலம் நடைபெறுகிறது.

இது குழந்தைகளின் கதை சொல்லும் திறனை மட்டுமல்ல, அவர்களின் தன்னம்பிக்கையையும், விமர்சன சிந்தனைத் திறனையும் மேம்படுத்துகிறது.

2020ஆம் ஆண்டு தொடங்கிய லேர்னர் சர்க்கிள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகெங்கும் பரவிக்கிடக்கும் இந்தியக் குழந்தைகளுக்கு அவர்களின் ஆர்வங்களை ஆராய்ந்து, அதனை அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட உதவியுள்ளது.

சென்னையில் நிறைவடைந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவைத் தொடரந்து, விரைவில் துபாய் உத்சவ் மற்றும் லண்டன் உத்சவ் என மற்ற உலக நகரங்ளிலும் நடக்க உள்ளது. லேர்னர் சர்க்கிள் இளம் எழுத்தாளர்களுக்கு உலகளாவிய மேடைகளை வழங்குவதன் மூலம், அவர்களின் இலக்கிய கனவுகளை நனவாக்குகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button