
’பரிதாபங்கள்’ என்ற யூடியூப் இணையதளம் மூலம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரிட்சயமானவர்கள் கோபி மற்றும் சுதாகர்.
இவர்கள் தற்போது ‘பரிதாபங்கள்’ ப்ரொடக்ஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளனர்.
இதில், உருவாகும் முதல் படத்தினை ‘க்ரொவ்ட் பண்டிங்’ முறையில் தயாரிக்க திட்டமிட்டு, இதுவரை சுமார் 6.5 கோடி வரை கிடைத்துள்ளதாம்.
இப்படத்தின் தலைப்பாக ‘ஹேய் மணி கம் டுடே கோ டுமாரோவ் யா’ ((Hey Money Come Today Go Tomorrow Ya )) என்ற வடிவேலுவின் டயலாக்கை வைத்துள்ளனர்.
இப்படத்தினை, எஸ் ஏ கார்த்திக் இயக்கவிருக்கிறார். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் மற்றும் நிஜாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது.
Facebook Comments





