
தெறி, மெர்சல் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்த விஜய்-அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து சன் நிறுவனம் பெற்றுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் சன் நிறுவனம் அறிவித்துள்ளது.
Facebook Comments





