நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் நடிகர் விஷாலின் மனுவை விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதியை நேரடியாக அனுகியிருக்கிறார் ஐசரி கணேஷன்.
இந்த விவகாரத்தை தாமாகவே முன் வந்து வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார் நீதிபதி.
இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக கொண்டுவரப்பட்ட இந்த வழக்கு ஐசரி கணேஷன் அவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கினார் நீதிபதி.
ஆதரவற்ற குழந்தைகள்,திருநங்கைகளின் நலனுக்காக ரூ.10 லட்சத்தை தருவதாக ஐசரி கணேஷ் உத்தரவாதம் அளித்தார்.
தனது தவறுக்காக ரூ.10 லட்சத்தை அபராதமாக செலுத்துகிறேன் என நீதிமன்றத்தில் ஐசரி கணேஷ் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டப்பணிகள் குழு ஆணையக்குழுவில் ரூ.10 லட்சத்தை செலுத்த ஐசரி கணேஷ்க்கு நீதிபதி உத்தரவு.
Facebook Comments