தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதகாக வேட்பாளர்கள் அனைவரும் தீவிரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
மேலும், பிரச்சாரத்திலும் அதிதீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், அன்றைய தினம் தமிகத்தில் இயங்கும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
Facebook Comments