Spotlightதமிழ்நாடு

பாஜக-வை விட்டு முழுமையாக விலகுகிறேன் – திருச்சி சூர்யா!

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகுகிறேன் என்று திருச்சி சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆபாசமாக அவர் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளொயாகியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி.” என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button