
2010 ஆம் ஆண்டில் விமல், ஓவியாவின் யதார்த்த நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் தான் ‘களவாணி’. இப்படத்தினை சற்குணம் இயக்கியிருந்தார். இப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
மீண்டும் அதே எதிர்பார்ப்பில் விமல்,ஓவியா நடிப்பில் உருவாகியுள்ளது ‘களவாணி 2’.இப்படத்தையும் சற்குணமே இயக்கியிருக்கிறார்.
நேற்று உலகம் முழுவதும் இப்படம் வெளியானது. படமும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது…
இப்படத்தில், ஓவியாவின் தந்தையாக நடித்திருப்பவர் ராஜ்மோகன்குமார். செல்லத்துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.
தனது முதல் படம் என்பாதை கூட தெரியபடுத்தாமல, தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி , படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு கதாபாத்திர நடிகர் கிடைத்துவிட்டார்.
வாழ்த்துகள் ராஜ்மோகன்குமார் சார்…
ஹ்க்க்ர்ஜ்க்ர்ஜ்க்க்ட்





