சர்வதேச நண்பர்கள் தினத்தை ( ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு ) முன்னிட்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி போக்குவரத்து காவல்துறை & அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை இயக்கத்துடன் இணைந்து தலைக்கவச விழிப்புணர்வு இன்று நடத்தப்பட்டது.
இதில், தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதுமட்டுமல்லாமல், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி நாளை முதல் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டும்படி காவல்துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பந்துகள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.
காவல்துறையின் முயற்சிக்கு நெல்லை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென நெல்லை டெபுடி கமிஷனர் சரவணன் கேட்டுக் கொண்டார். சரவணன் அவர்களின் இந்த செயலுக்கு நெல்லை சீமை மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.,