சூர்யா நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படம் தான் ‘வாடிவாசல்’. இப்படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.
இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட இருக்கிறது. இதனால் சூர்யா காளைகளுடன் அதிகமாக இருக்கும்படி காட்சிகள் எடுக்கபடவிருக்கிறதாம்.
இதற்காக சூர்யாவை காளைகளுடன் பழகுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம். ஆகவே, சூர்யா பழக காங்கேயம் காளைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாம். அந்த காளைகளுடன் சூர்யா 15 நாட்கள் பழகவிருக்கிறார்.
தற்போது சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் “வாடிவாசல்” ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments