![](https://tamilveedhi.com/wp-content/uploads/2022/12/FIR-file-on-pichaikkaran-2-team.jpg)
இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்து ப்ளாக் பஸ்டர் அடித்த திரைப்படம் தான் “பிச்சைக்காரன்”. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணியில் இறங்கினார் விஜய் ஆண்டனி. “பிச்சைக்காரன் 2” படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இயக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்காக அனுமதியின்றி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் மேல், டிரோன் கேமரா பறக்கவிட்டதற்காக படக்குழுவினர் மூவரை கைது செய்துள்ளனர் போலீஸார்.
படக்குழுவைச் சேர்ந்த நவீன் குமார், சுரேஷ் மற்றும் ரூபேஷ் மூவரும் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
Facebook Comments