
லடாக் எல்லை தொடர்பாக இந்திய – சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனப்படை வெளியேறும்போது வன்முறை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வன்முறையில், ஒரு அதிகாரி உட்பட மூன்று ராணுவ வீரர்கள் யிரிழந்துள்ளனர். அதில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடாணை அடுத்த கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் ஆவார்.

இதில் சீன ராணுவ வீரர்கள் 5 பேர்கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments




