
நடிகர் ராதாரவி நடிப்பில் ஆர் வி ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டுமின்றி எளிய மக்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்ற படம் தான் “கடைசி தோட்டா”.
ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனீஷ் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருந்தார்.
படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான ஆர் வி ஆர் ஸ்டூடியோஸ்.
இப்படம், ஒரு பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தினையும் ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments




