அறம் தொடங்கி சமீபத்திய க/பெ ரணசிங்கம் வரையில் கே ஜே ஆர் நிறுவனம் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் ‘ரூபம்’ படம் தயாராகவுள்ளது. கே ஜே ஆர் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இதில் பார்வதி கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘ரூபம்’ கதைக்கு அழகு சேர்க்க ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ஜிப்ரான், சண்டைக் காட்சிகளுக்கு இயக்குநராக பீட்டர் ஹெய்ன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
‘ரூபம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழு பணிபுரிந்து வருகிறது. இதில் பார்வதி நாயருடன் முன்னணி இந்தி நடிகர் ஃப்ரெடி டாருவாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இதுவாகும். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.